tamilnadu

img

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி பள்ளிக்கு வரத் தடை

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி பள்ளிக்கு வர தடைவிதித்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
உத்திர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளி செல்லும் வழியில்  சிறுமியை கடத்தி இருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி முதல்வர்  பாதிக்கப்பட்ட மாணவியை பள்ளிக்கு வர வேண்டாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும்,  சிறுமியின் கல்விக்கு தடை விதிக்கும் நோக்கில் நடந்து கொண்ட பள்ளிமுதலவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டனர்.  இந்த  உத்தரவின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.